தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் அதிகபட்சமாக 161 பேருக்கு தொற்று உறுதி..!

0
Corona
Corona

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில்161 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2300ஐ தாண்டி உள்ளது. ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா:

  • தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 2,323 பேர்
  • இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை – 27 பேர் (1.20%)
  • சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 1,19,748
  • வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை – 31,375 பேர்
  • அரசு கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை – 40 பேர்

தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,258 (54.20%) ஆக அதிகரித்து உள்ளது. 1,035 பேர் தற்போது கொரோனா தாக்கத்தால் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 2323 பேரில் 1553 பேர் ஆண்கள், 770 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கும், மதுரை மற்றும் செங்கல்பட்டில் தலா 5 பேருக்கும், ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 3 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், திருவள்ளூர், கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை மற்றும் சேலத்தில் தலா ஒருவருக்கும் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறிகளும் இன்றி கொரோனா தாக்கம் ஏற்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்து உள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 12 வயதிற்கு உட்பட்ட 142 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:

  • சென்னை – 906 பேர்
  • கோவை – 141 பேர்
  • திருப்பூர் – 112 பேர்
  • திண்டுக்கல் – 80 பேர்
  • ஈரோடு – 70 பேர்
  • மதுரை – 84 பேர்
  • நெல்லை – 63 பேர்
  • செங்கல்பட்டு – 78 பேர்
  • நாமக்கல் – 59 பேர்
  • திருச்சி – 51 பேர்
  • திருவள்ளூர் – 55 பேர்
  • தேனி – 43 பேர்
  • நாகை – 44 பேர்
  • கரூர் – 42 பேர்
  • ராணிப்பேட்டை – 40 பேர்
  • கள்ளக்குறிச்சி – 9 பேர்
  • தென்காசி – 48 பேர்
  • திருவண்ணாமலை – 15 பேர்
  • கன்னியாகுமரி – 16 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here