ஏழைகளின் பண்டம் – கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு..!

0

தமிழ்நாட்டின் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றாலே அனைவர்க்கும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மிகுந்த சத்தும், சுவையும் உடைய இந்த பண்டத்திற்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி கடலைமிட்டாய்:

கோவில்பட்டி என்றாலே கடலை மிட்டாய் தான் பலருக்கும் நியாபகம் வரும். அந்த அளவுக்கு சுவையும், புகழும் உடையது. தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் கடலை மிட்டாய் கிடைத்தாலும் கோவில்பட்டி கடலைமிட்டாய் என்றால் அதன் சுவை அதிகமாகவே இருக்கும். ஏழைகளின் பண்டம் என்று அழைக்கப்படும் இது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.

கோவில்பட்டி கடலை மிட்டாய் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்று நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தெரிவித்து உள்ளார். சமீபத்தில் பழனி பஞ்சாமிர்தத்திற்கும் புவிசார் குறியீடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here