தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 49 பேர் உயிரிழப்பு..!

0
Corona death
Corona death

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 49 பேர் உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா நிலவரம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரங்களாக மிக அதிகமாக உள்ளது. இன்றுடன் தொடர்ந்து 17வது நாளாக இரட்டை இலக்கத்தில் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. இது கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து இருப்பதை காட்டுகிறது. தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட காரணத்தால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48,019 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில் இன்று 49 பேர் உயிரிழந்து உள்ளதால், மொத்த எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Corona Update
Corona Update

லடாக்கில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 1,438 பேர் குணமடைந்து உள்ளதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,782 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 919 பேருக்கும், செங்கல்பட்டில் 88 பேருக்கும், திருவண்ணாமலையில் 64 பேருக்கும், ராணிப்பேட்டையில் 76 பேருக்கும், திருவள்ளூரில் 52 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்கள்:

  1. சென்னை – 34,245 பேர்
  2. செங்கல்பட்டு – 3,108 பேர்
  3. திருவள்ளூர் – 1,944 பேர்
  4. காஞ்சிபுரம் – 803 பேர்
  5. திருவண்ணாமலை – 768 பேர்
  6. கடலூர் – 568 பேர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here