தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 1,989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் என்பது தொடர்ந்து 14வது நாளாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று அந்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டி உள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,687 ஆக உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்து உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,487 பேருக்கும், செங்கல்பட்டில் 136 பேருக்கும், திருவள்ளூரில் 78 பேருக்கும் மற்றும் காஞ்சிபுரத்தில் 22 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. இன்று தமிழகத்தில் 1,002 பேர் குணமடைந்து உள்ளதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,409 ஆக அதிகரித்து உள்ளது.
தெலுங்கானாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட முதல் எம்எல்ஏ..!
சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு இதுவரை 30,444 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,705 பேருக்கும், திருவள்ளூரில் 1,797 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 672 பேருக்கும், திருவண்ணாமலையில் 636 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.