தமிழகத்தில் 38 பேராக இருந்த கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேர் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
40ஐ தாண்டிய கொரோனா..!
தமிழகத்தில் புதிதாக கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது நபருக்கும், காட்பாடியைச் சேர்ந்த 49 வயது நபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய கும்பகோணம் நபருக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பிரிட்டனில் இருந்து திரும்பிய காட்பாடியைச் சேர்ந்த நபருக்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருவரின் உடல் நிலையும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கன்னியாகுமாரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் 5 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 3 பேர் உயிர் இழந்து உள்ளனர். அவர்களின் சோதனை முடிவுகள் வந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என்பது தெரியவரும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |