தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் அதன் தாக்கம் கட்டுக்கடங்காமல் இதுவரை 35 பேரை பாதித்து உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு உங்களால் முடிந்த நிதியுதவி செய்யுமாறு தமிழக அரசு பொதுமக்களிடம் கோரி உள்ளது.
நிதியுதவி விபரங்கள்:
தமிழக அரசு ஏற்கனவே 3780 கோடி ரூபாய் ஒதுக்கி தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசிடமும் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளுக்கு 4000 கோடி ரூபாய் நிதியுதவி கோரி உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களால் முடிந்த நிதியுதவிகளை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டு உள்ள விபரங்கள்,
- நிவாரண நிதியை முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நேரடியாக பொதுமக்கள் வழங்குவதை ஊக்குவிக்க இயலாது.
- எனினும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்பவர்கள் குறித்த விபரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.
- நன்கொடைகளுக்கு வருமான வரிசட்டப்பிரிவு 80(G) படி 100% வரிவிலக்கு அளிக்கப்படும்.
- நன்கொடைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மின்னணு முறையில் செலுத்தலாம்.
- சென்னை தலைமை செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் நிதியுதவிகளை செலுத்தலாம்.
- அக்கவுண்ட் நம்பர் – 117201000000070, IFSC – IOBA0001172
- வெளிநாடு வாழ் மக்கள் IOBAINBB001, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்தலாம்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |