மக்கள் கோரிக்கைப்படி ராமாயணம் மறுஒளிபரப்பு செய்யப்படும் – பிரகாஷ் ஜவடேகர்.!

0

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஐ நெருங்கி உள்ளது. அதனால் ஏப்ரல் 14 வரை இந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கோரிக்கைக்கு ஏற்ப ராமாயணத்தை மறுஒளிபரப்பு செய்ய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவில் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர வேறு எதற்கும் வெளியே செல்ல கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டி உள்ளது. இதனால் மக்கள் குழந்தைகள் அனைவரும் செல் போன், தொலைக்காட்சியிலேயே பொழுதை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ராமாயண நிகழ்ச்சி மறுஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நிகழ்ச்சி மார்ச் 28 முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதி காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பப்படும். மற்றொரு பகுதிக்கு இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பப்படும்” என தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here