சட்டசபையில் முதலவர் இ.பி.எஸ் அவர்கள் 110 வது விதியின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு அறிவிப்புகள் அறிவித்துள்ளார்.
இ.பி.எஸ். வெளியிட்ட அறிவிப்புகள்..!
- தமிழகத்தில் உள்ள 4,282 அரசு பள்ளிகளில் ரூ.48 கோடியில் கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்படும்.
- ரூ.5 கோடி செலவில் புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள் துவங்கப்படும்.
- சென்னை வேளச்சேரியில் வனத்துறை அலுவலகங்களுக்கு உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.22 கோடி ஒதுக்கீடு.
- வனங்களில் ஏற்படும் தீ விபத்தை தவிர்க்க ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பு காவல்படை உருவாக்கப்படும்.
- நெருப்புக்கோழி, மலைப்பாம்பு ஆகிய விலங்குகள் கொண்டு நடுத்தர வன உயிரின பூங்கா ரூ.10 கோடியில் உருவாக்கப்படும்.
- சேலம் குரும்பப்பட்டியில் சிறு வன உயிரின பூங்கா, நடுத்தர வன உயிரின பூங்காவாக தரம் உயர்த்த ரூ.8 கோடி ஒதுக்கீடு.
- திருப்பூர் மாவட்டத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் ரூ.18 கோடி செலவில் அமைக்கப்படும்.
- 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக ரூ.36 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
- 30 அரசு உயர்நிலை பள்ளிகள் ரூ.55 கோடியில் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
- 10 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 45 அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ.25 கோடியில் மேம்படுத்தப்படும்.
- ஆரணி நகராட்சியில் அமைந்துள்ள சூரிய குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பாதுகாப்பு வேலி ரூ.6 கோடியில் அமைக்கப்படும்.
- யானைகள் காடுகளில் இருந்து வெளியேறுவதை தடுக்க எக்கு கம்பியூடன் கூடிய சிமென்ட் கான்கீரீட் ரூ.27 கோடியில் அமைக்கப்படும்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |