பி.இ அரியர் தேர்வுகள் நடத்த தயார் – தமிழக அரசு AICTEக்கு கடிதம்??

0

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தொழில்நுட்ப குழுமம் (AICTE) சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று தமிழக அரசு சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அரியர் தேர்வுகள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து இறுதிப்பருவ தேர்வுகளை தவிர, பிற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார். அதுமட்டுமின்றி அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்படும் என உத்தரவிட்டார். இதனால் பல ஆண்டுகளாக அரியர் தேர்வுகளை எழுதிவரும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ‘அரியர் மாணவர்களின் அரசனே’, ‘எங்கள் ஓட்டு உங்களுக்குத் தான்’ என போஸ்டர், பேனர் அடித்து தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியை பதிவு செய்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், அரியர் மாணவர்களின் மகிழ்ச்சி சில நாட்கள் கூட நிலைக்கவில்லை. தமிழக அரசின் உத்தரவினை எதிர்த்து அகில இந்திய தொழில்நுட்ப குழுமம் (AICTE) சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கினால் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.  (மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கையின் படி, AICTE அமைப்பு நீக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் கல்விக் கொள்கை அமலுக்கு வரும் வரை AICTEக்கு இன்ஜினியரிங் தேர்வுகளில் முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது)

தனியார் கல்லூரிகளில் ஒரு ஷிப்ட் முறை – உயர்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு!!

kp-anbalagan
kp-anbalagan

இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த தயார் என தமிழக அரசு பதில் கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், AICTEயிற்கு எந்த கடிதமும் எழுதவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறியுள்ளார். இதற்கிடையில் அரசின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு உயர்கல்வித்துறை, AICTE மற்றும் யுஜிசி க்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காரணங்களால் அரியர் தேர்வுகள் ரத்தா? இல்லையா? என தெளிவான முடிவு தெரியாமல் மாணவர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here