சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் நிலையில் தமிழகத்தில் பாஜக தான் ஆட்சி அமைக்கும், இது குறித்து விரைவில் உங்களுக்கு தெரியவரும் என்று நடன இயக்குனரான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனை பாஜக வில் இணைய அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக:
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக பல சினிமா பிரபலங்களை தன் வசம் இழுத்து பதவிகளையும் கொடுத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பாஜக தலைமையில் கட்சியினர் போட்டியிடுவர் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தொடர்ந்து பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எமது கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் இருப்பார்கள் என பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நடன இயக்குனரும், பாஜக கலை கலாச்சார பிரிவின் மாநில தலைவரான காயத்ரி ரகுராம் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது, “இனி வரும் காலங்களில் பாஜக தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். தமிழ் கடவுளை இழிவுபடுத்தும் விதத்தில் பேசியுள்ளனர்.
இதனால் மக்கள் தனது எதிர்ப்பினை காட்டியுள்ளனர். இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும். மேலும் சிவகார்த்திகேயனுக்கு விருப்பம் இருந்தால் பாஜக.,வில் இணையலாம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.