கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் நிலுவையில் இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தாமல் தமது பெயரில் புதிய நிதியத்தை உருவாக்கியுள்ளது ஏன் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
பிரதமர் நிவாரண நிதி வேண்டி வேண்டுகோள்..!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளுக்காக குடிமக்கள் பாதுகாப்பு அவசரகால நிவாரணத்துக்காக நிதி திரட்டும் நோக்கில் PM CARES பொது நிவாரண நிதி வங்கி கணக்கு விவரங்களையும் அவர் வெளியிட்டார்.
காங்கிரஸ் கட்சி கேள்வி..?
பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி திட்டம் கடந்த 72 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நிலுவையில் இருக்கின்ற 3,800 கோடி ரூபாயை பயன்படுத்தாமல் புதிதாக தமது பெயரில் பிரதமர் மோடி புதிய நிதியத்தை உருவாக்குவது ஏன்?
என PM CARES குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |