இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2ம் இடம் – ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி..!

0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டி உள்ளது. மேலும் இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.

டெல்லி மாநாடு சென்றவர்கள்:

இன்று தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 75ல் 74 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் டெல்லி மாநாடு சென்று தமிழகம் திரும்பிய அனைவர்க்கும் (1103 பேர்) சோதனை செய்யப்பட்டு சிலரின் முடிவுகள் இன்னும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 309 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா வைரஸிற்கு மதச்சாயம் பூசுவதா..? இந்தியாவில் தொடரும் அவலங்கள்..!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 264 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக தமிழகத்திற்கு 6 சோதனை மையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 28 நாட்கள் கண்காணிப்பு நிறைவடைந்து 4070 பேர் இதுவரை வீடு திரும்பி உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here