‘நான் ஒன்றும் மலிவான நபர் இல்லை’ – டாப்ஸி ஆவேசம்!!

0

சமீபத்தில் நடிகை டாப்ஸியின் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து தற்போது டாப்ஸி ‘நான் மலிவானவள் இல்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

டாப்ஸி:

டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் போன்றவர்களின் வீட்டில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. மேலும் இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசிற்கு எதிராகவும் டாப்ஸி கடுமையாக குரல் கொடுத்து வருகிறார். இவரை போல் அனுராக் காஷ்யப்பும் இதே செயலில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக தான் டாப்ஸி மற்றும் அனுராக் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்று கூறிவருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா மாநில அமைச்சர் கூறியதாவது, டாப்ஸி போன்றவர்களின் குரல்களை முடக்குவதற்கு அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது என்று கூறினார். மேலும் நடந்து முடிந்த சோதனையில் டாப்ஸியின் வீட்டில் இருந்து சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான பண ரசீது கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். தற்போது இதுகுறித்து நடிகை டாப்சீ கருத்து தெரிவித்துள்ளார்.

‘நீங்க கார் வாங்கிட்டீங்க அப்போ பாலா’ – ரசிகர்களின் கேள்விக்கு புகழ் பதிலடி!!

அவர் கூறியதாவது, என் பெயரில் இருப்பதாக கூறிய 5 கோடி மதிப்பிலான ரசீதை அவர்கள் பிரேம் செய்து எனக்கு எதிர்காலத்தில் தரப்போகிறார்கள். ஏனெனில் இதனை நான் ஏற்கனவே ஏற்க மறுத்து விட்டேன். மேலும் பாரிசில் எனக்கு சொந்தமாக ஓர் பங்களா இருப்பதாக கூறினார்கள். அதன் சாவியை என் வீட்டில் தேடினார்கள். நமது நிதியமைச்சர் கூறியது போல் வருமான வரித்துறையின் சோதனை பற்றிய நினைவுகள் என்னிடம் உள்ளது என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் நான் தற்போது மலிவானளவள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here