இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியின் மூலமே இந்த தொடரை வெல்லப்போவது யார் என்பது தெரியவரும்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 205 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் சுழலில் இங்கிலாந்து சிக்கியது என்று தான் சொல்லவேண்டும். அதன்பின்பு இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது.இதில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பும்ராஹ் அனுபமா திருமணம்?? இணையத்தில் கசிந்த தகவல்!!
இந்திய அணி தரப்பில் ரோஹித் 49 மற்றும் ரிஷாப் பாண்ட் 101 ரன்கள் எடுத்து ஆறுதல் கொடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 3, ஸ்டோக்ஸ் மற்றும் லீச் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அக்சர் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் வந்த இஷாந்த் 0, சிராஜ் 0 ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுந்தர் 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 160 ரன்கள் முன்னிலையில் உள்ளது. பின்பு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இதில் கிராவிலே 5, பேரிஸ்டோ 0, ரூட் 30,லீச் 2, லாரன்ஸ் 50 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் சுழலில் சிக்கினர். இவரை தொடர்ந்து சிப்லே 3, ஸ்டோக்ஸ் 2, போப் 15, ஃபோக்ஸ் 13, பெஸ் 2 ரன்கள் எடுத்து அக்சர் சுழலில் சிக்கினர். தற்போது களத்தில் லாரன்ஸ் மற்றும் லீச் விளையாடி வருகின்றனர்.தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 135 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி தற்போது இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் தொடரையும் வென்று அசத்தியது.