பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பிய நிலையில் அவரது இறப்பிற்கு தற்கொலை தான் காரணம் என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. ‘தூக்கில் தொங்குவதைத் தவிர வேறு எந்த காயமும் உடலில் இல்லை. இறந்தவரின் உடலிலும், உடைகளிலும் வேறு எவ்வித அடையாளங்கள் எதுவும் இல்லை’ என்று எய்ம்ஸ் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் சிங் தற்கொலை:
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தடயவியல் மருத்துவ வாரியம், சுஷாந்த் சிங்கின் உடல்கூராய்வு விபரங்களை வெளியிட்டு உள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய போதைப்பொருள் விசாரணையில் முன்னாள் காதலி ரியா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏழு மருத்துவர்களைக் கொண்ட எய்ம்ஸ் தடயவியல் மருத்துவ வாரியத்தின் தலைவரான டாக்டர் குப்தா கூறுகையில் “தூக்கில் தொங்குவதைத் தவிர சுஷாந்த் உடலில் எந்த காயங்களும் இல்லை. இறந்தவரின் உடலிலும் உடைகளிலும் வேறு எவ்வித தடயங்களும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இது குறித்த விபரங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
முதன்முதலாக தனது குழந்தையுடன் போட்டோஷூட் செய்த ஆல்யா மனசா – வைரலாகும் புகைப்படம்!!
அவரது கழுத்தில் இறுக்கியதற்கான அடையாளத்தை தவிர வேறு எந்த காயங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுஷாந்த் சிங் வழக்கில் ரியா போதைப்பொருள் உபயோகம் குறித்து வழங்கிய தகவல்கள் அடிப்படையில் பல முன்னணி பாலிவுட் நடிகைகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.