சீரியலில் நடித்ததன் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த மார்ச் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சம்யுக்தா – விஷ்ணு காந்த். இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தங்களுக்குள் இருந்த அந்தரங்க விஷயங்களை சோசியல் மீடியாவில் சொல்லி பெரும் சர்ச்சையை கிளப்பினார்கள்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர்கள் தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் விவகாரம் குறித்து சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்தரங்க உறவை வெளியே சொல்லி அவர்கள் பெயரை அவர்களே அசிங்கப்படுத்தி கொண்டார்கள்.
இப்படி அந்தரங்க விஷயங்களை சோசியல் மீடியாவில் சொல்வது கேவலமாக இல்லையா. சமூக வலைத்தளங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து வருகின்றனர். அப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இப்படி நடந்து கொண்டது கேவலமாக இல்லையா. இதுக்கு பேசாம விவாகரத்து வாங்கி பிரிந்திருக்கலாம் என்று கொந்தளித்து பேசியுள்ளார்.