இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால் ஏப்ரல் 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவை அந்த தேதியுடன் நிறுத்துவது என்பது சாத்தியமற்றது என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
நிறைய கட்டுப்பாடுகள்:
பிரதமர் மோடி அவர்கள் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் நடத்திய வீடியோ கான்பரன்சிங் மீட்டிங்கில் இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி உடன் ஊரடங்கு உத்தரவை நிறுத்துவது என்பது சாத்தியமற்றது என்று தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. உயிர் இழப்புகளும் அதிகரித்த படியே உள்ளது.
ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என தெலங்கானா, அசாம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்து உள்ள நிலையில் ஒருவேளை ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி உடன் நிறுத்தப்பட்டாலும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |