10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் குளறுபடி?? 22% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி!!

0

தமிழகத்தில் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 10ம் வகுப்பு தேர்வெழுதிய 22 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தேர்வு முடிவுகள்:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே நடைபெற்ற ஆண்டுத் தேர்வுகள் மற்றும் வருகைப் பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இதே உத்தரவை தனித்தேர்வர்களுக்கும் அமல்படுத்துமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பான வழக்கிலும் தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருந்தது. இதனால் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. மாநிலம் முழுவதும் 39,000 பேர் எழுதிய தேர்வில் வெறும் 8,000 பேர் (22%) மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமின்றி 12ம் வகுப்பு தேர்விலும் வெறும் 12% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டு இருக்கலாம் என மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here