கதிர், முல்லை ஜோடிக்கு ரொமான்ஸ் சீன் எப்போ வைப்பீங்க?? எதிர்பார்ப்பில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ’ ரசிகர்கள்!!

0
pandian stores

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ம் ஒன்று. சில நாட்களாக சோகமான எபிசோடுகளையே பார்த்து வந்த நமக்கு தற்போது கதிர் முல்லை ரொமான்ஸ் சீன் ஒளிபரப்பாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸில் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் முதன் முதலாக அந்த வீட்டில் கர்பமடையும் மீனாவை அந்த குடும்பம் மிகவும் பாசமாக கவனித்து வந்தனர். மீனாவிற்கு வளைகாப்பு விழாவை அனைத்து பிரபலங்களையும் அழைத்து கோலாகலமாக கொண்டாடினர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

pandian stores
pandian stores

இப்பொழுது சீரியலிலும் நிஜ வாழ்க்கையிலும் மீனாவிற்கு குழந்தை பிறந்தது. மேலும் வீடியோ கால் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். சில தினங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸில் சோகமான காட்சிகளே ஒளிபரப்பானது. அதாவது குடும்பத்திக்காக மூத்த அண்ணனான மூர்த்தி குழந்தை பெறாமல் இருக்கும் விஷயம் தெரிந்து பல சண்டைகளும் உருவாகின. இதனால் எபிசோடு முழுவதும் சோக கீதமே பாடி வந்தனர்.

pandian stores

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து சமாதானம் ஆகியுள்ளனர். மேலும் மூர்த்தியின் அம்மா தனத்தை எந்த நேரத்திலும் கைவிட கூடாது என தம்பிகளிடம் சத்தியம் வாங்குகிறார். எப்படியோ எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டது என்று முல்லை ரிலாக்ஸ் ஆக ரூமிற்கு போக அப்பொழுது தான் கதிர் குளித்து விட்டு உள்ளே வருகிறார்.

pandian stores

முல்லை கதிர் தலை துவட்டுவதை பார்த்து விட்டு அவருக்கு தலையை துவட்டி விடுகிறார். முதன் முதலில் முல்லையின் கை கதிர் மீது பட்டதும் சட்டென்று திரும்புகிறார். அதன் பிறகு இருவருக்கும் ரொமான்ஸ் ஆரம்பிக்க பக்கத்தில் அமர்கின்றனர். சரி இப்பொழுதாவது ரொமான்ஸ் ஆரம்பித்தார்களே என்று மக்கள் ஆவலுடன் பார்த்திருக்க அந்த வேளை பார்த்து கதிரின் நண்பன் கால் செய்து காரியத்தையே கெடுத்து விடுகிறார்.

pandian-stores-kathir-and-mullai
pandian-stores-kathir-and-mullai

அதாவது கதிர் திருமணம் செய்து வைத்த தம்பதிகளுக்கு பிரச்சனை ஏற்படவே அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் வேறு வழி இல்லாமல் முல்லையின் அறையில் தங்க வைக்கின்றனர். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. மேலும் எப்பொழுது தான் கதிருக்கு ரொமான்ஸ் சீன் வைப்பீங்க? என்று பலரும் கடுப்பாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here