பார்மிற்கு திரும்பிய ஸ்ரீசாந்த் – 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்தல்!!

0

தற்போது இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் கேரள அணியில் விளையாடிய ஸ்ரீசாந்த் 5 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஸ்ரீசாந்த்:

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2013ம் ஆண்டு நடத்த ஐபிஎல் போட்டியில் ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளதாக கூறி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் போட்டிகளில் பங்கேற்கவும் நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது இவரது தடை காலம் நீங்கிய நிலையில் இவர் முதலாவதாக சையது முஷ்டாக் அலி கோப்பையில் பங்கேற்றார்.ஆனால் அதில் இவரது செயல்பாடு பேசும் அளவிற்கு இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அந்த தொடரில் இவரது பந்து வீச்சு சராசரி 9 ரன்னுக்கு மேலாக இருந்தது. மேலும் இவர் நடக்கப்போகும் ஐபிஎல் போட்டிக்காக ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ஆனால் ஏலத்தில் இவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இந்நிலையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் இவர் கேரள அணியில் விளையாடி வருகிறார். இன்றைய போட்டியில் கேரளா மற்றும் உத்திர பிரதேச அணிகள் மோதின.

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை – ரவுடிகளை கணக்கெடுக்கும் காவல்துறை!!

இந்த போட்டியில் உத்திர பிரதேச அணி 283 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆனால் கேரள அணி தரப்பில் அசத்தலாக பந்து வீசிய ஸ்ரீசாந்த் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் இந்த போட்டியின் மூலம் யாரெல்லாம் தன்னை பார்ம் அவுட் என்று நினைத்தார்களோ அவர்களுக்கு தடாலடியாக தனது பதிலை தெரிவித்துள்ளார். தற்போது இவர் பார்மிக்கு திரும்பிய நிலையில் பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here