விஜய் டிவியில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை இருந்து வருகிறது. ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. மனோஜ் திருமணத்தில் ஆரம்பித்து இப்பொழுது ரவி திருமணம் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதை நகர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி, ஸ்ருதி இப்பொழுது யார் என்ன நினைப்பார்கள் என்று கூட யோசிக்கலாம் மனதில் பட்டத்தை பேசி விடுகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஸ்ருதியால் தான் இப்பொழுது ரோகினி மாட்ட போகிறார் என்பது மட்டும் தெரிகிறது. அதாவது, ஸ்ருதி வீட்டில் இருந்து அவரது அப்பா, அம்மா சீர் கொடுக்க ஆரம்பிக்க இதனால் ரோகினியிடமும் கேட்க ஆரம்பிக்கின்றனர். முத்துவிற்கும் இது அதிக சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எப்படியும் முத்து, ஸ்ருதி யாராவது ஒருவர் கண்டுபிடித்து உண்மையை வெளிக்கொண்டு வருவார்களாம்.