சிறகடிக்க ஆசை சீரியலில் தாலி பெருக்கு விழாவில் ரோகினியின் அப்பா வந்துவிடுவார் என குடும்பத்தில் உள்ள எல்லோரும் எதிர்பார்த்து காத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடைசிவரை ரோகினி அப்பா வருவதாக தெரியவில்லை. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தேகம் வருகிறது. இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் விஜயா ரோகினியிடம் உன் அப்பா வருவாருன்னு சொல்லி என்னையே ஏமாற்ற பார்க்கிறீயா??
உன்னோட திருட்டுத்தனம் எதுவும் என்கிட்ட நடக்காது. ஒழுங்கா மரியாதையா உன்னோட அப்பா வரணும் என அவரை எச்சரிப்பாராம். இதனால் ரோகினி என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பாராம். மேலும் நிச்சயம் ரோகினி அப்பா மட்டும் வரவில்லை என்றால் அவரைப் பற்றிய அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.