தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என கூறிய திமுக அரசு, நிதி பிரச்சனை காரணமாக தகுதியான ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மட்டும் உரிமை தொகையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் அமைச்சர்களிடம், பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள் தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி சமரசம் செய்து வருகின்றனர்.
இச்சூழலில் இந்த திட்டத்தின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின், விண்ணப்பித்த ஒரு கோடியே 63 லட்சம் பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை தேர்தலுக்குப் பிறகு உறுதியாக வழங்கப்படும் என உறுதி அளித்து வருகிறார். இதனால் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.