நாடு முழுவதும் இளைஞர்களின் சுயதொழில் செய்யும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் கடன் உதவி திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுவதோடு 5 கோடி வரையிலும் கடன் உதவியும் வழங்கப்படுகிறது.
இச்சூழலில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு ரூ.75 லட்சம் வரை மானிய தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. அதன்படி ஆர்வமுள்ள தேனி மாவட்ட இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.