சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி ஸ்ருதியை சந்தித்து முத்து-மீனா இருவரும் சமாதானப்படுத்தி பேசுகின்றனர். முதலில் மீனா பேசுவதற்கு ஸ்ருதி கோபப்பட்டாலும் பின் நடந்த அனைத்து உண்மைகளையும் புரிந்து கொள்கிறார். இப்படி இருக்கும் சூழலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஜயா என் மகன் ரவி வராமல் நான் இனி சாப்பிட மாட்டேன் என்கிறார்.
இதைக்கேட்டு முத்து எப்படியாவது விஜயாவை சாப்பிட வைக்கும் வேண்டுமென ஒரு மாஸ்டர் பிளான் போடுகிறார். அதற்காக பிரியாணி ஒன்றை வாங்கி வந்து அண்ணாமலை மீனா அனைவரும் சாப்பிடுகின்றனர். மேலும் இந்த பிரியாணியை சாப்பிட்டால் நினைத்தது நடக்கும் என்று முத்து சொல்ல விஜயாவால் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. இதனால் விஜயா தான் எடுத்த முடிவை மீறி பிரியாணி சாப்பிடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.