சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி ஒரு வழியா முத்து செய்த பிரச்சினையால் நாம் தப்பித்து விட்டோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயா சரியாக ஏன் உங்க அப்பா வரவில்லை என ரோகிணியிடம் கேள்வி எழுப்புகிறார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரோகினி தவிக்கிறார். அப்போது ரோகினி அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல உடனே அண்ணாமலை என்ன ஆச்சு என்று கேட்கிறார்.
ஆனால் ரோகினி வாந்தி, தலை சுற்றுவது போல் இருப்பதாக சொல்கிறார். இதை கேட்டு விஜயா தவறாக புரிந்து கொள்கிறார். மேலும் ரோகினி கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என்று தெரிந்து அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார். இதைக் கேட்டு மனோஜ் எதுவும் பேசாமல் அதிர்ச்சியாகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் ரோகினி உண்மையாகவே கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து கொண்டு மனோஜ் ஏதாவது பிரச்சனை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.