இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தீவிரமாகி வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டின் மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக இணையதள தாக்குதல் நடத்தப்படலாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை போல, நடப்பாண்டிலும் ஈரானின் ஜெருசலேம் தினத்தன்று #OpJerusalem, #OpIsrael என்ற ஹேஸ்டேக் பெயரில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அன்றைய தினம் வலைத்தளங்களை ஹேக்கிங் செய்தல், போலியான செய்திகள் பரவுதல், லிங்க் மூலம் கணினியில் வைரஸ் பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகள் நடைபெறலாம். எனவே இஸ்ரேல் அமைப்புகள் மற்றும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.