சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கிளாம்பாக்கத்தில் இருந்து வடசென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என பயணிகள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முன்னதாக 10 சதவீதம் பணி முடிவடைந்த நிலையில், ரயில்வே தளத்தில் நடைமேடை மற்றும் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தகவல் கூறியுள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
கோடை வெயிலுக்கு குளுகுளு நியூஸ்.., இந்த மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை!!