தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோரப் பகுதி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அடுத்த மூன்று மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சுட்டெரிக்கும் இந்த கோடை வெயிலில் மழை பெய்யும் என வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.