தென்னிந்திய திரையுலகில் முன்னணி பாடகிகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சின்மயி. இவரது மெல்லிய குரலில் பல மொழிகளில் எக்கசக்க பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இவர் 5 வருடங்களுக்கு மேலாக பாடகர் வைரமுத்துவின் மீது 17 + பெண்களுடன் சேர்ந்து பாலியல் குற்றச்சாட்டை சொல்லி அவருக்கு எதிராக வழக்கு பதிந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் இது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களுக்கு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதாவது தற்போது டெல்லியில் பாலியல் தொல்லை கொடுத்த மல்யுத்த வீரர் பிரிஜ் பூஷன் எதிராக பல மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல பத்திரிகையாளரை உட்கார விடாமல் நாற்காலியை எட்டி உதைத்த உலகநாயகன்.., அரண்டு போன படக்குழுவினர்!!
இதற்கு சின்மயி, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என பேசும் நீங்கள் உங்கள் நண்பர்/ அரசியல் ஆதரவாளர் வைரமுத்துவின் மீது இருக்கும் ME TOO வழக்கில் ஏன் கவனம் செலுத்துவதில்லை. மேலும் சினிமா மற்றும் ஊடக துறையில் பணியாற்றும் பெண்கள் இன்னும் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர். இதனை ஏன் உங்கள் அரசு கவனித்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .