தென்னிந்திய தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிப்பதில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு இருப்பவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் புதுமையான விஷயங்கள் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். அதனால் தான் அவரால் அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் கொடுக்க முடிகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அவர் இயக்கி நடித்த விருமாண்டி, ஹே ராம், விஸ்வரூபம் பார்ட் 1 மற்றும் 2 உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. தற்போது இந்தியன் 2 வில் நடித்து வரும் இவர் அரசியலிலும் குதித்துள்ளார். ஆனாலும் அதில் வெற்றிபெற முடியாமல் தவித்து வரும் கமல் தனது கவனத்தை சினிமா பக்கமே திருப்பியுள்ளார்.
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, ஒரு படத்தின் ஷூட்டிங் போது, பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்பவர் பேட்டி எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் நாற்காலியில் அமர்ந்த போது, உடனே அவரை எழுந்திருக்க சொல்லியுள்ளார்.
சொன்னது மட்டுமின்றி நாற்காலியை ஓங்கி எட்டி மிதித்து பறக்க விட்டுள்ளார். இதை பார்த்து படக்குழுவினர் மற்றும் செய்யாறு பாலு அதிர்ச்சியில் உறைந்து போகினர். என்னவென்று படக்குழுவினர் கேட்ட போது, ஒரு கெஸ்ட் வரும் பொழுது பழுதடைந்த நாற்காலியா போடுவீங்க, அவங்களுக்கு இப்படி தான் மரியாதை தருவீர்களா என்று கோபத்துடன் பேசியுள்ளார். இதை செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.