வயசு 35 ஆகிருச்சு.. ரெண்டு குழந்தைக்கு அம்மாவும் ஆயிட்டே.., இப்ப ஹீரோயினா? மேடையில் ராஜலக்ஷ்மி நெகிழ்ச்சி!!

0
வயசு 35 ஆகிருச்சு.. ரெண்டு குழந்தைக்கு அம்மாவும் ஆயிட்டே.., இப்ப ஹீரோயினா? மேடையில் ராஜலக்ஷ்மி நெகிழ்ச்சி!!
வயசு 35 ஆகிருச்சு.. ரெண்டு குழந்தைக்கு அம்மாவும் ஆயிட்டே.., இப்ப ஹீரோயினா? மேடையில் ராஜலக்ஷ்மி நெகிழ்ச்சி!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த ஷோவின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர்கள் தான் நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் இணைந்து சினிமாவில் பல பாடல்கள் பாடியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் சமீப காலமாக செந்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்று ஒரு செய்தி இணையத்தில் வைரலான நிலையில், தற்போது ராஜலட்சுமி லைசன்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கணபதி பால முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராதா ரவி, அயலி அபி நட்சத்திரா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாடகி ராஜலட்சுமி பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது என்னுடைய முதல் படத்தின் டிரைலர், பாடல்களை பார்க்கும் பொழுது எனது முதல் குழந்தையை பெற்றெடுத்த போது இருந்த சந்தோஷம் எனக்கு இருந்தது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி.

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 12 ல் திறப்பு?? வெளியான தகவல்!!

ஒரு படம் பண்ணுவதில் எவ்வளவு ரிஸ்க் இருக்கும் என்று இந்த படத்தில் தான் தெரிந்து கொண்டேன். எனக்கு 35 வயதாகிருச்சு. ரெண்டு குழந்தை பெற்றெடுத்துட்டேன். இப்ப நான் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளேன். என் மேல அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்த படக்குழு அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்த படம் அதிகம் பேசப்படும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here