இந்த பொது முடக்கத்தின் போது மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட நடிகை ஷிவானி நாராயணன் தற்போது சேலை கட்டி ஹாட்டாக இருக்கும் ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
ஷிவானி நாராயணன்
சின்னத்துறையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணமானவர்கள் பலர். ஆனால், ஒரு சிலர் மட்டுமே சீரியல் மூலம் புகழ் அடைந்து அதனை அப்படியே மைண்டைன் செய்வர். அந்த வகையில் ஒரு சில சீரியல் மூலமாக பலர் மனதினை கவர்ந்தவர் தான், நடிகை ஷிவானி நாராயணன்.
இவர் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியல் முலமாக அறிமுகமானார். மிகவும் சிறிய வயதிலேயே அந்த சீரியலில் நடித்து விட்டார்.
நோக்கிய நிறுவனத்தின் அதிரடி முடிவு – ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோக வாய்ப்பு!!
அவருக்கு சிறிய வயது தான் என்றாலும், அந்த வயதிலேயே அவர் தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தினை ரசிகர்களின் மத்தியில் பிடித்திருப்பார். “பகல் நிலவு” சீரியலில் ஷிவானி மற்றும் அன்வர் ஜோடிக்காகவே பலர் பார்த்தனர்.
இவர்களது கெமிஸ்ட்ரிக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலின் வெற்றியை அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “இரட்டை ரோஜா” என்ற சீரியலில் நடித்தார். இப்படியாக இருக்க இந்த வருடம் நடைபெற்ற “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதே போல் ஷிவானி இந்த பொது முடக்கத்தின் போது பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு காரணம், அவரது போட்டோஷூட் தான். சரியாக இன்ஸ்டாகிராமில் 4 மணிக்கு தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுவிடுவார்.
இப்படியாக இருக்க ஷிவானி தற்போது சேலை அணிந்து ஹாட்டாக இருக்கும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றது.