இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் தங்களது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா மகளிர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி ஒரு நாள் தொடரை விளையாடி வருகின்றனர். 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 3-1 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே வென்று அசத்தியது. எனவே இன்று நடைபெறும் கடைசி போட்டி சம்பிரதாய போட்டி தான். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு மிக மோசமாக இருந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சௌந்தர்யா, கண்ணம்மாவை பற்றி பாரதியிடம் வத்தி வைக்கும் வெண்பா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!
முதலில் பேட் செய்த இந்திய அணி 188 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் மித்தாலி 79 ரன்களை குவித்தார். மீதமுள்ள அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்ததாக களம் வந்த தென் ஆப்பிரிக்கா அணி மிக சிறப்பாக விளையாடி வந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் டு ப்ரீஸ் மற்றும் போஸ்ச் அரைசதம் கடந்து அசத்தினர். முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மேலும் ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.