சின்னத்திரை நடிகர் நண்பர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை!!

0

சென்னையில் சின்னத்திரை நடிகர் தனது நண்பரின் வீட்டில் வைத்து தற்கொலை செய்துள்ளார். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னத்திரை:

தற்போதைய காலங்களில் இளைஞர்கள் அனைவரும் ஏதேனும் பிரச்னை என்றால் அதற்கு எடுக்கும் ஒரே முடிவு தற்கொலை. இந்த காலத்தில் இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். இதேபோல் தான் தற்போது சினிமா துறையில் நடந்து வருகிறது. ஏற்கனவே பல சின்னத்திரை நடிகர்களின் தற்கொலைக்கு காரணமே தெரியாத நிலையில் தற்போது மீண்டும் ஓர் சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்துள்ளார். சென்னையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி வந்தார் சின்னத்திரை நடிகர் இந்திர குமார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் கடந்த புதன்கிழமை அன்று தனது நண்பருடன் படத்திற்கு சென்று விட்டு அன்று இரவு மற்றொரு நண்பரின் வீட்டிற்கு தூங்குவதற்கு சென்றார். பின்பு காலையில் இவரை தேடி இவரது நண்பர்கள் அந்த வீட்டிற்கு சென்ற போது இவர் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். உடனே இவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசுக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற நவோமி ஒசாகா!!

இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக வராத காரணத்தினாலும் மேலும் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையினால் தான் இவர் தற்கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இவருக்கு ஓர் சிறு குழந்தை இருப்பதாகவும் கூறுகின்றனர். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,. தொடர்ந்து திரையுலகினர் தற்கொலை செய்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here