தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் அவரவர் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே செப்.21 முதல் பள்ளிகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு சார்பில் தொலைக்காட்சி வாயிலாகவும், ஆன்லைன் மூலமும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசின் அனுமதியின் பேரில் செப்.21 முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அசாம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அக்டோபர் 1 முதல் மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் பாடங்கள் தொடர்பான சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10, 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு காரை பரிசளித்த அமைச்சர் – குவியும் பாராட்டுக்கள்!!
மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி பெற்று அவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளை மட்டுமே திறக்கலாம் எனவும் ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து இடைவெளி விட்டு பள்ளிகளுக்கு வர வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.