குழந்தைகள், இளைஞர்கள் என யாரும் காய்கறிகளை விரும்பி உண்பது கிடையாது. பாஸ்ட் புட் உலகமானதால் காய்கறிகளை மறந்தே விட்டோம். இப்பொழுது காய்கறிகளை வைத்து ‘வெஜ் கைமா’ எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. குழந்தைகள் விரும்பும் வகையிலும், சுவையான மற்றும் சத்தான இதனை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம்
- குடைமிளகாய்
- பச்சைபட்டாணி
- பச்சைமிளகாய்
- தக்காளி
- சாஸ்
- மிளகாய்த்தூள்
- மிளகுத்தூள்
- மஞ்சள்தூள்
- கேரட்
- பீன்ஸ்
- பன்னீர்
செய்முறை
முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், பீன்ஸ், குடை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு போன்றவற்றை பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன்பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கவும். அதன்பின் கேரட், பீன்ஸ் என 2 நிமிடங்களுக்கு ஒருமுறை சேர்க்கவும். பிறகு அதில் தக்காளி சாஸை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து அதன்பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதில் துருவிய பன்னீரை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு பிறகு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வெஜ் கைமா தயார். இது சப்பாத்தி, மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.