பள்ளிகளை திறப்பது பற்றி வரும் 12ஆம் தேதி இறுதி முடிவு – கல்வித்துறை அமைச்சர்!!

0
Minister-Sengottaiyan-Press-Meet_
Minister-Sengottaiyan-Press-Meet

தமிழகத்தில் பள்ளிகள் வரும் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கலாமா? இல்லையா? என்பது பற்றி தகவல் வரும் நவம்பர் 12 ஆம் தேதி, நாளை மறுநாள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் நிலையில் 45% பெற்றோர் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள . மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்பில் தான் பாடம் கற்று வருகிறார்கள். இந்நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தமிழக என்று அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால் நிறைய எதிர்ப்புகள் வந்த நிலையில் பள்ளிகள் திறப்பு முடிவில் என்ன செய்யலாம் என்று கலந்துரையாடல் போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், வரும் நவம்பர் 12 ஆம் தேதி இதை பற்றிய தகவல் கண்டிப்பாக வெளிவரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

minister sengottaiyan
minister sengottaiyan

கொரோனா அச்சம் உள்ள சூழலில், கல்வி நிறுவனங்களை திறக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் பள்ளிகள் திறக்குமா? இல்லையா? என்பது பற்றி ஆவலுடனும் குழப்பத்திலும் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதைப்பற்றி கல்வித்துறை அமைச்சரிடம் விசாரித்த போது, அவர் பெற்றோர்களிடம் இதை பற்றிய கருத்துகளை கேட்டபோது 45% பெற்றோர்கள் வீட்டில் பிள்ளைகள் தொல்லை தாங்க முடியவில்லை, எனவே சீக்கிரம் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். சிலர் குளிர் காலத்தில் தொற்று அதிகமாக பரவும் காரணத்தினால் பொங்கல் முடிந்து பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே நவம்பர் 12 ஆம் தேதி அன்று அரசு அதைப்பற்றிய முழு தகவலை வெளியிடும். அதுவரை காத்திருங்கள் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here