பள்ளிகள் திறப்பால் மீண்டும் ஏற்பட்ட பாதிப்பு- மூன்று மாணவிகளுக்கு தொற்று உறுதி!!

0

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மூன்று பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

முறையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு கல்லூரி மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 3 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதை அடுத்து தொற்று பாதிப்பிற்கு உள்ளாகிய மாணவிகளுடன் படிக்கும் சக மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here