சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நான்கு வருட காவல் தண்டனை முடிந்து வரும் 27 ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு உண்டாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சசிகலாவுக்கு உடல்நலக்குறைபாடு
பெங்களூரு அக்ராஹரம் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டு கால சிறைவாசம் முடித்து வரும் ஜனவரி 27 ம் தேதி விடுதலையாக உள்ளார். இவரது தணடனை காலம் அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. சசிகலாவின் விடுதலைக்கு பிறகு அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்படலாம் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது.
வசூல் மழையில் ‘மாஸ்டர்’ மற்றும் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் – வெளியான தகவல்!!
இதைதொடர்ந்து சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இன்று காலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறைச்சாலை வளாகத்துக்குள் இருந்த மருத்துவர் குழு அவருக்கு பரிசோதனை செய்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் கவலைப்படும்படியான பாதிப்புகள் ஏதும் அவருக்கு உண்டாகவில்லை என சிறை மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.