தடாலடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – வெள்ளியின் விலையும் அதிகரிப்பு!!

0

சென்னையில் தற்போது ஆபரணதங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 152 அதிகரித்துள்ளது. தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது.

தங்கத்தின் விலை:

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,152க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது 22 காரட் தங்கத்தின் விலை மீண்டுமாக ரூ.152 உயர்ந்து ரூ.37,208 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.4,644 விற்கப்பட்டு வந்த நிலையில் மேலும் கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ரூ.4,651 க்கு தற்பொழுது விற்பனையாகிறது.

திருப்பதி கோவிலுக்கு 3 டன் காய்கறிகள் – நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள்!!

தங்கம் மட்டுமல்லாது வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. காலையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70 க்கு விற்கப்பட்ட வெள்ளி தற்பொழுது கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30 காசுகளுக்கு தற்பொழுது விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here