இன்று பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கர்ப்பமான செய்தியினை சொல்லி அகில், அஞ்சலி மற்றும் சௌந்தர்யா ஆகியோர் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு அஞ்சலி கர்ப்பமான விஷயத்தை அறிந்த கண்ணம்மா சந்தோச மிகுதியில் அஞ்சலியை ஆரத்தழுவி முத்தமழை பொழிகிறார்.
அஞ்சலியின் கர்ப்பமான செய்தி:
இன்று “பாரதி கண்ணம்மா” தொடரில் அகிலனின் மனைவி அஞ்சலி கர்ப்பமாகிறார். அவர் கர்ப்பமான செய்தியை அறிந்து அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்த சந்தோச செய்தியினை அஞ்சலி குடும்பத்தினருடன் சௌந்தர்யா பகிர்ந்து கொள்கிறார். அவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனை அடுத்து அஞ்சலிக்கு எது தேவையானது என்று குடும்பத்தினர் ஆலோசித்து அவரை மகிழ்ச்சிபடுத்த ஆயத்தமாகினர்.
வசூல் மழையில் ‘மாஸ்டர்’ மற்றும் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் – வெளியான தகவல்!!
இதன் பிறகு, சௌந்தர்யா ஹேமாவினை அழைக்க பள்ளிக்கு செல்கிறார். அங்கே ஹேமா இன்றும் நீங்கள் அவர்களை பார்க்கவில்லை என்று கண்ணம்மாவை பற்றி கூறுகிறார். இதனை அடுத்து நாளை கண்டிப்பாக சீக்கிரம் அவர்களை பார்க்க வருவதாக சௌந்தர்யா சத்தியம் செய்கிறார்.
இப்படியான நிலையில் அவர் ஹேமாவிடம் உனக்கு ஒரு சந்தோஷமான செய்தியை சொல்ல போகிறேன் என்று சௌந்தர்யா சொன்னதும், ஹேமா அது என் அம்மாவை பற்றி தானே என்று கூறியதும், சௌந்தர்யா கவலை அடைந்து விடுகிறார்.
சந்தோஷமடையும் கண்ணம்மா:
அவர் கண்ணம்மாவை பற்றியும் இனி குடும்பத்தினர் அனைவரும் அஞ்சலியை நடத்தும் விதத்தில் ஹேமா ஏங்க ஆரம்பித்து விடுவாளோ என்றும் பயப்படுகிறார். இதன் பிறகு ஹேமா சந்தோஷமான செய்தி என்ன என்றும் கேட்டதும் சௌந்தர்யா உனக்கு ஒரு தம்பி அல்லது பாப்பா வர போகிறார்கள் என்று சொல்கிறார். இதனை கேட்டு ஹேமா குதூகலம் அடைகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்கு பிறகு சௌந்தர்யா, அஞ்சலி மற்றும் அகிலன் மூவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு அஞ்சலி பற்றி சௌந்தர்யா சொல்வதை எதர்ச்சையாக கோவிலுக்கு வரும் கண்ணம்மா கேட்டுவிடுகிறார். இதனால் சந்தோசம் அடையும் கண்ணம்மா அஞ்சலியை காட்டி பிடித்து தனது மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்.
பல வருடங்களுக்கு பிறகு கண்ணம்மாவை பார்த்த அஞ்சலி அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.