தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. தற்போது இந்த இரண்டு திரைப்படத்தின் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன்:
கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீதம் மட்டுமே ரசிகர்களை படம் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு விதித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்பட்டது. கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி அன்று வெளியானது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மோட்டோரோலா எட்ஜ் S ஸ்மார்ட்போன் – அறிமுக தேதி வெளியீடு!!
வசூலை அள்ளும் மாஸ்டர்:
இதற்க்கு போட்டியாக சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் கடந்த 14ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதி வந்தது. மேலும் தற்போது இந்த 2 படங்களின் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் மட்டும் கடந்த 6 நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் ரூ.6.1 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மாஸ்டர் திரைப்படம் சுமார் ரூ.88 கோடி வரை வசூலை அள்ளியுள்ளது. மேலும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் சுமார் ரூ. 7.8 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.