மோட்டோரோலா ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது தனது லேட்டஸ்ட் மாடலான மோட்டோரோலா எட்ஜ் S என்னும் ஸ்மார்ட்போனை இந்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மோட்டோரோலா எட்ஜ் S:
கடந்த சில மாதங்களாகவே ஸ்மார்ட்போன் நிறுவனம் அனைத்தும் தங்களது லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் மோட்டோரோலாவும் இடம் பெற்றுள்ளது. இதனுடைய லேட்டஸ்ட் மாடலான மோட்டோரோலா எட்ஜ் S என்னும் ஸ்மார்ட்போன் இந்த மாதம் 26ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் டிஸ்பிலேவை பெற்றிருக்கும். மேலும் இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 256ஜிபி பெற்றுள்ளது. இதன் கேமரா 108 mp+8 mp+16 mp ஆகிய தன்மையை கொண்டுள்ளது. மேலும் இதன் பேட்டரி 5000mAh தன்மையை பெற்றுள்ளது. இதன் ரேம் 12ஜிபி அளவை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சி டைப் சார்ஜிங் தன்மையை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.