ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் இறுதி விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது.
பேரறிவாளன் வழக்கு
பேரறிவாளனின் மனு தொடர்பான வழக்குக்கு கடந்த 2018 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மாநில அரசு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து மாநில அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசு இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசோ, மாநில அரசோ முடிவு எடுக்க முடியாது என கூறியிருந்தது.
மோட்டோரோலா எட்ஜ் S ஸ்மார்ட்போன் – அறிமுக தேதி வெளியீடு!!
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் இறுதியாக பேரறிவாளனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்பான முடிவு குடியரசு தலைவர் தான் எடுக்க வேண்டும் எனவும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான சிக்கலுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மாநில அரசு முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் கூறியதற்கு மத்திய அரசிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என பேரறிவாளன் தரப்பில் கூறப்பட்டது.