முன்னதாக வரும் 7ம் தேதி அன்று சசிகலா தமிழகம் வருகை தரவுள்ளார் என்று டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு வரும் 8ம் தேதி அன்று சசிகலா தமிழகம் வரவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
சசிகலா:
சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டில் பெங்களூரு அக்ரஹாரா பகுதி சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு கடந்த 27ம் தேதியுடன் அவரின் தண்டனை காலம் முடிவுக்கு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 20ம் தேதி அன்று அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக சசிகலா மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா கடந்த 27ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பின்பும் மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். தற்போது அவரது உடல் நலமானதால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தமிழகம் வருகை:
தற்போது அவர் பெங்களுருவில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் சில தினங்களுக்கு முன்பு சசிகலாவின் தமிழகம் வருகை குறித்து டிடிவி.தினகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது வரும் 7ம் தேதி அன்று சசிகலா தமிழக வருவார் என்று தெரிவித்தார்.
வரலாறு காணாத சாதனை படத்தை பங்குச்சந்தை நிலவரம் – குஷியில் முதலீட்டாளர்கள்!!
ஆனால் தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு வருகிற 8ம் தேதி அன்று சசிகலா தமிழகம் வருகிறார் என்று அறிவித்துள்ளார். 7ம் தேதி வருகை தகவலை கேட்டு வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி சசிகலாவை வரவேற்க அனுமதி கோரி ஓர் கடிதம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.