கடந்த சில தினங்களாகவே இந்தியா பங்குச்சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போது இன்றைய நிலவரப்படி வரலாற்று சாதனையை படைத்துள்ளது சென்செக்ஸ் புள்ளிகள். இதனால் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர்.
பங்குச்சந்தை:
தற்போது தான் நம் நாடு கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. கடந்த கொரோனா காலத்தில் இந்தியா பங்குச்சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் இந்தியாவின் பொருளாதாரமே சரிவை கண்டது. தற்போது அனைத்து துறைகளிலும் தொழில்கள் நடைபெற்று வருவதால் தற்போது இந்தியாவின் பொருளாதாரம் சற்று மீள தொடங்கியுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் கடந்த சில தினங்களாகவே இந்தியா பங்குச்சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தில் அபார வளர்ச்சி அடையும் என்று பொருளாதார முனைவர்கள் கூறியுள்ளனர். தற்போது அவர்கள் கூறியது போல் நடந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியா பங்கு சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘மீண்டும் அர்ச்சனாவால் அன்புக்கு வந்த சோதனை’ – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
அதன்படி இந்தியா பங்குச்சந்தை வரலாற்றிலையே முதன் முறையாக சென்செக்ஸ் 50,621 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 366 புள்ளிகள் அதிகரித்து தற்போது 50,621 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு நிலவரப்படி 118 புள்ளிகள் உயர்ந்து 14,908 புள்ளிகளை தொட்டு உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.