விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அதிரடியாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. தனது அத்தையின் சதித்திட்டத்தை தெரிந்துகொண்டு வீட்டை விட்டு துரத்துகிறார் மீனா.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்ப்பாராத பல திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது மீனா எதுவும் தெரியாமல் தனது அத்தையின் பேச்சை நம்பி வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டு கொண்டிருந்தார். இது தான் சாக்கு என்று மீனாவின் அத்தை ராசாத்தியும் குடும்பத்தை பிரிக்கும் வேலையில் மும்முரமாக இருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது முல்லைக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை. மீனா மீதும் கோவத்திலேயே இருந்தார் முல்லை. மேலும் கண்ணனையே அழ வைக்கும் அளவிற்கு ராசாத்தியின் நடவடிக்கை இருந்தது. நம் குடும்பம் பிரிந்து விடுமோ என்ற பயத்திலேயே இருந்தார் மூர்த்தி. மீனாவும் எதையும் கேட்பதாக இல்லை. வீட்டின் நிலைமையை எப்படி சரி செய்வது என பலரும் புலம்பிக்கொண்டு தான் இருந்தனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவின் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் உள்ளனர். அதாவது தனது அத்தையின் சித்து விளையாட்டை நேரடியாகவே பார்த்த மீனா அதிரடியாக சண்டையிட்டுள்ளார். நீ என்ன பாத்துகிறதுக்காக வந்தியா?? இல்லை இந்த குடும்பத்தை பிரிகிறதுக்காக வந்தியா?? என்று நேரடியாகவே கேட்டு விடுகிறார் மீனா.
மலிவு விலையில் நோக்கியா 3.4 ஸ்மார்ட் போன் – விரைவில் இந்தியாவில் அறிமுகம்!!
இதனால் கோவித்துக்கொண்டு செல்கிறார் மீனாவின் அத்தை. மேலும் ஜனார்தனனும் வந்து விட அவர் கேஸ், வாஷிங் மெஷின் என அனைத்தையும் கொண்டு போக சொல்லுகிறார். தனக்கு எதாவது தேவை என்றால் இந்த வீட்டில் உள்ளவர்களிடம் வாங்கிக்கொள்வதாக கூறுகிறார். கோவமடையும் ஜனார்த்தனன் மீனாவை முறைத்த படியே வீட்டை விட்டு செல்கிறார்.