நோக்கியா நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போனான நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தற்போது இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நோக்கியா:
போன் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழ்வது தான் நோக்கியா நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய நாடுகளில் வெளியாகியுள்ளது. அங்கு 3 வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்குதாம் தற்போது இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகவுள்ளது என்று நோக்கியா போனை சந்தைப்படுத்தும் HMD குளோபல் நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த ஸ்மார்போனின் வெளியீட்டு தேதி தற்போது வரை சஸ்பென்ஸ் ஆகவே இருந்து வருகிறது. ஆனால் இந்த போன் வருகிற 10ம் தேதி அன்று நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 3ஜிபி ரேம் வசதியை கொண்ட நோக்கியா 3.4 இந்தியாவில் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படலாம் என்று ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். ஆண்ட்ராய்டு 10ல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் எச்டி டிஸ்பிலேவில் வெளியாக உள்ளது.
பிப்ரவரி 8 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை மையம் தகவல்!!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வசதிகளில் கிடைக்கிறது. பின் பகுதியில் ட்ரிபிள் கேமராவும் மற்றும் 8 பிக்சல் கொண்ட செலஃபீ கேமெராவும் இடம் பெற்றுள்ளது. 32 ஜிபி மாற்றம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியை பெற்றுள்ளது. மேலும் 4000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டைப் சி சார்ஜிங் தன்மையை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.