பிப்ரவரி 8 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

0

தற்போது வெளிவந்திருக்கும் மதிய நேர தகவலின் படி தமிழகத்தில் வரும் ஐந்து நாட்கள் வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை தகவல்

தற்போது வெளிவந்துள்ள வானிலை மையத்தின் மதிய நேர தகவலின் படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4.2.2021 முதல் 8.2.2021 வரை உள்ள ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஏதும் இல்லாமல் வானம் வறண்டு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் முதல்வர், துணைமுதல்வர், எம்.எல்.ஏகளுக்கு தடுப்பூசி – விஜயபாஸ்கர் தகவல்!!

சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டத்துடனும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிப்ரவரி நான்கு முதல் எட்டு தேதிகளில் மன்னார் வளைகுடா மட்டும் குமரி கடற்கரையை ஒட்டி பலத்த காற்று வட கிழக்கு திசையில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here